இப்படியும் ஒரு தீர்ப்பு!

பெங்களூர் மாநகராட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது உறுப்பினர் தூங்கலாமா என்ற பிரச்சினை எழுந்தது.

அதைக் கேட்டு ஆராய்ந்து தீர்ப்பு சொன்னார் மாநகராட்சி மேயர்.

“உறுப்பினர் தூங்கலாம், தாராளமாக. ஆனால், குறட்டைவிட்டு அவை நடவடிக்கையைக் கெடுக்கக் கூடாது.”

தீர்ப்பிலும் எவ்வளவு சாத்வீகம்!

இது எழுபதுகளில் ‘ஹிம்மத்’ என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி.

Comments (0)
Add Comment