பிம்பங்கள் சூழ் உலகு!

லாவகமான பொய்களால்
நம்மால் கட்டமைக்கப்படும்
பிம்பங்கள்

காற்றினால் ஊதப்பட்ட
பலூன்கள் மாதிரி தான்.

எந்தக் கண அழுத்தமும்
கூர் ஊசியாய் அந்தப் பிம்பத்தை
உடைத்துவிடலாம் தான்,
இருந்தும்
சளைக்காமல்
நம்மைச் சுற்றி
எத்தனை
நுரைக்குமிழிப் பிம்பங்கள்!

– அகில்

Comments (0)
Add Comment