நீ இல்லையேல் நானில்லையே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே

       (கலையே…)

மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே

       (கலையே…)

கோயில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நானில்லையே

     (கலையே…)

– 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘மீண்ட சொர்க்கம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment