சூர்யா போல வித்தியாசத்தை உணர்ந்தால் நல்லது!

– இயக்குநர் சேரன்

சூர்யா நடித்து, தயாரித்த ‘ஜெய்பீம்’ படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக பாராட்டு இருக்கிறது.

இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான சேரன், “எப்படியோ ஒரு நடிகரை இந்த சினிமா, வர்த்தக சினிமாவில் இருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்து இருக்கிறது.

மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோன்ற சமூகத்துக்கான படங்கள் செய்தால், சென்றடையும் வீச்சை… வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment