வாழ்க்கை சொல்லித் தரும் பாடம்!

வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்

         (வாழ்க்கை…)

வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி

         (வாழ்க்கை…)

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்தப் படகின் நிலை போலே ஆகும்

         (வாழ்க்கை…)

– 1964-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘பூம்புகார்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் மு.கருணாநிதி.

Comments (0)
Add Comment