ஒப்பனை கலைக்காமல் வந்த ‘பாசமலர்கள்’!

அருமை நிழல் :
*
1961 ஆம் ஆண்டு. சென்னையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா.
அதைத் திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

விழாவில் பலரையும் ஈர்த்த அம்சம், அப்போது நடந்து கொண்டிருந்த ‘பாசமலர்’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கான மேக்கப்புடன் நரை இழையோடிய தாடி அடர்ந்த முகத்தோடு சிவாஜியும், அந்தக் காட்சிக்கான ஒப்பனையுடன் இருந்த சாவித்திரியும் அப்படியே வந்து விழாவில் கலந்து கொண்டது தான்.

கூடவே கலந்து கொண்டவர் நடிகர் ஜெமினி. அப்போது நாளிதழ்களில் இது படத்தோடு முக்கியச் செய்தியானது.
*

Comments (0)
Add Comment