ஆதரவாளர்களைச் சந்திக்கிறார் சசிகலா!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் திருமதி.வி.கே. சசிகலா அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

இன்று தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா, நாளை (28.10.2021) மதியம் ஒரு மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக மதுரைக்குச் செல்கிறார்.

மதுரையில் 29.10.2011 அன்று காலை 8 மணிக்கு கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் அருள்மிகு மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அங்கு அமைந்துள்ள தேவர் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் பசும்பொன்னில் இருந்து புறப்பட்டு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்றடைகிறார். அதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் திருமதி சசிகலா தொண்டர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

Comments (0)
Add Comment