சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!

ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்’ கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக பத்திரிகையாளர்கள் திகழ வேண்டும்.

சமூக அக்கறையுள்ள பார்வையாக இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் பயம் மற்றும் பாரபட்சம் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.

அதேபோல் ஊடகங்கள் நாட்டுக்காக திறம்பட சேவை செய்ய வேண்டும். அச்சு ஊடகங்களைப் போல சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment