ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!

கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில்  பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

அப்போதைய மெட்ராஸில் 1812 டிசம்பர் 18 ஆம் தேதி பிறந்த போவர் மறைந்தது பாளையங்கோட்டையில்.

மறைந்தது 1885 செப்டம்பர் 2 ஆம் தேதியில்.

பாளையங்கோட்டையில் இப்போதும் இருக்கிற கருஞ்சலவைக்கல் கல்லறையில் ஆங்கில எழுத்துக்களுடன் இந்தத் தமிழ் வாசகங்களும் தெளிவாகத் தெரிகின்றன.

“அவர் மரித்தும் பேசுகிறார்”.

Comments (0)
Add Comment