ஆயுதபூஜை கொண்டாட்டம்: பொருட்கள் விற்பனை தீவிரம்!

கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டு இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தினத்தில் பழம், பொரி கடலை, சுண்டல் போன்றவற்றை வைத்தும் படையலிட்டு வழிபட்டு வருகின்றனர். கடைகளிலும், அலுவலகங்ளிலும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன.

இதனிடையே, கொரோனா தொற்றால் கடந்த ஆண்டை காட்டிலும் மார்க்கெட்டுக்கு 20 சதவீத மக்களே பொருட்கள் வாங்க வந்துள்ளனர். இதனால் எதிர்பார்த்த விற்பனை நடக்காமல் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோயம்பேடு போல தியாகராயநகர், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகளிலும் குறைந்த அளவிலான மக்களே பூஜைப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Comments (0)
Add Comment