தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் பிரிவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஷ்ஹத் பஹீமா என்ற பெண்ணுக்கு சிறந்த மனித நேய பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இஸ்தானாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஹலீமா யாகூப் விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

விருது பெற்ற நஷ்ஹத் பஹீமா, “இன, மத வேறுபாட்டைக் களைந்து அனைத்து மக்களிடம் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திட பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment