யாருமே பொருட்படுத்துவதில்லை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒரு குழந்தையின்
அழுகையை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
ஒப்பாரி வைக்கும்
நீரற்ற நதிகளை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
வெறுமையாகிப்
போகும் விவசாயத்தை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
இணையமில்லா
உறவுகளை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
கட்டாயமாக
கள்ளிப்பால் குடிக்கும்
பச்சிளம் தேவதைகளை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
பெருத்த தனிமையோடு
அழத் தொடங்கும்
தெருவோர
ஏதிலிகளை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
கொடூரமாய் சபித்துக்
கொண்டு உயிர்மடியும்
பாலியல் வன்புணர்வுகளை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
சமாதானமாய் வாழலாம்
என்ற பெரியவர்களின்
மூதுரையை.!

யாருமே
பொருட்படுத்துவதில்லை..
பெருங் குரலெடுத்து
அழத் தொடங்கும்
கொரோனா
மரணங்களை…!

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment