நெருங்கும் கொரோனா 3-வது அலை!

– மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை.

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை தொடர்பாக பேசிய நொய்டா கைலாஷ் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் டாக்டர் மகேஷ் ஷர்மா, “கொரோனா இரண்டாம் அலைக்கு நாம் தயார்நிலையில் இல்லை.

மருத்துவர்களும், மருத்துவ சேவை ஊழியர்களும் மனதளவில் தயாராகவில்லை. தயாராக இருந்திருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது” எனக் கூறினார்.

அதே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கங்கன்தீப் காங், “இரண்டாம் அலை போன்ற பலமான மூன்றாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் பெரும்பாலானோர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், அனைவரும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதேபோல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலெரியா, “பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால் நாம் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருந்தால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறையும்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment