அமைதியைத் தகர்த்தெறியுங்கள்!

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜள் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் சில மாதங்களுக்கு முன்பு ஓ.டி.டியில் வெளியானது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது.

அண்மையில்  தொலைக்காட்சியில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைப் பார்த்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், தனக்கு 48 வயதுடைய உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததைத் தாயிடம் கூறியிருக்கிறார்.

இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த உறவினர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பார்த்து பலரும் பொன்மகள் வந்தாள் படத்தை வலைத்தளத்தில் பாராட்டினர்.

இந்நிலையில், இந்தச் செய்தியை நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பாதிக்கப்படும் பெண்கள் அமைதியைத் தகர்த்தெறிந்து வெளியே வரும்படி அறிவரை வழங்கியுள்ளார்.

ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், “அந்த அமைதி நிலையை தகர்த்தெறியுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும்போது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து நிற்கிறாள்” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment