ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி!

மாநில தேர்தல் ஆணையம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 22-ந்தேதியுடன் முடிவடைந்தது.

நேற்று வேட்பு மனுவை வாபஸ் கடைசி நாளாகும். இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி “23,988 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14,571 பேர் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#localbodyelection #மாநிலதேர்தல்ஆணையம்  #electioncommission  #ஊரகஉள்ளாட்சிதேர்தல்

Comments (0)
Add Comment