நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது!

நடிகர் சந்திரபாபுவின் நினைவுநாளான இன்று அவர் குறித்த மீள்பதிவு…

”நான் ஒரு….”

”ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் பாஷாணம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன்…

கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை.

தற்கொலை முயற்சி வழக்கு.

நீதிமன்றத்தில் போய் என்னை நிறுத்தினார்கள். ”உன் மனதில் ஏதோ குறை என்று சொல்கிறாயே.. என்ன என்று சொல்லேன்” – கேட்டார் நீதிபதி.

நான் என் டவுசர் பாக்கெட்டிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுத்தேன். ஒரு குச்சியைப் பற்றவைத்து என் கையைச் சுட்டுக் கொண்டேன்.

”இதே மாதிரி தான்.. நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என்று அதை உணர்த்தமுடியாது. அதை அவரவர்கள் தான் உணர முடியும்” – சொன்னேன்.

சிரித்துவிட்டுச் சொன்னார் நீதிபதி.

”முதல் முறை என்பதால் உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடியும் நீ வந்தால் கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிப்பேன்”

”அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன். இரண்டாவது முயற்சி நடந்தால் அது வெற்றிகரமாக முடியும்.” – என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கி நடந்தேன்”

”நான் ஒரு…” என்ற தலைப்பில் நடிகர் சந்திரபாபு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.

08.03.20215 : 03 P.M

Comments (0)
Add Comment