எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
                                      (தாயென்னும்…)

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
                                      (தாயென்னும்…)

நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு
                                      (தாயென்னும்…)

பாவங்கள் இலையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ் ! என்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
                                      (தாயென்னும்…)

எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
                                      (தாயென்னும்…) 

1971-ம் ஆண்டு சிவாஜிகணேசன், முத்துராமன் நடிப்பில் வெளிவந்த ‘மூன்று தெய்வங்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

01.03.2021 12 : 50 P.M

Comments (0)
Add Comment