சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்!

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்தாண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்.

மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

16.02.2021 11 : 02 A.M

Comments (0)
Add Comment