6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8-ம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத் தேர்வில் மாணவர்களும், பெற்றோர்களும் விரும்பும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2020–21 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்னரே 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் விரைவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

10.02.2021    11 : 35 P.M
Comments (0)
Add Comment