மாறாதையா மாறாது…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
                    (மாறாதையா…) 

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வைத்தாலும்
                    (மாறாதையா…) 

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது
காத்துல விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது
                      (மாறாதையா…) 

திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
                    (மாறாதையா…) 

-1962 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘குடும்பத் தலைவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

19.01.2021 03 : 10 P.M

Comments (0)
Add Comment